பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
01:07
கூவம்: கூவம், திரிபுராந்தகர் கோவிலில், நேற்று காலை, கொடியேற்றத்துடன் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துஉள்ளது கூவம் கிராமம். இங்குள்ள திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அதன்பின், இரவு சூரிய பிரபையும், சந்திர பிரபையும் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு பூர்வாங்கம் விநாயகர் ஊர்வலம் நடந்தது.இன்று, காலை பவழக்கால் சப்பரத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி திருவீதி உலாவும், இரவு பூதவாகனத்தில் திரிபுர சுந்தரி அம்மன் வீதி உலாவும் நடைபெறும். கொடியேற்ற விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.