திண்டிவனம்: திண்டிவனம் நாகமுத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்ப்பு திருவிழா துவங்கியது. திண்டிவனம் இலுப்ப தோப்பு நாகமுத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்ப்பு மற்றும் ஏழு நாள் திருவிழா நேற்று முன்தினம்(20 ம் தேதி) துவங்கியது. காலை 6 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் வெள்ளி கவசத்தில் ஆராதனை, 12 மணிக்கு கூழ் வார்த்தல் நடந்தது. 27 ம் தேதி வரை நடக்கும் ஏழு நாள் விழாவில் தினமும் இரவு உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 23ம் தேதி மாலை 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.