Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவிலில் ஓராண்டு ... குடுமியான் மலையில் 4,000 ஆண்டு பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி அம்மன் கோவில் சாலை பணி "ஆமை வேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
12:07

லாலாப்பேட்டை: மேட்டுமகாதானபுரம் - ஒமாந்தூர் இடையே சாலை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், ஆமை வேகத்தில் நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மகாதானபுரம். இங்கிருந்து மேட்டு மகாதானபுரம், ஒமாந்தூர், குப்புரெட்டிப்பட்டி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் செல்ல சாலை செல்கிறது. ஒரு வழிசாலை இருந்ததால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், மகாதானபுரம் பிரிவு சாலையிலிருந்து, ஒமாந்தூர் வரை, 5.5 மீட்டர் சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் ஒரு பகுதியில், குழி தோண்டப்பட்டு ஜல்லி போடப்பட்டு உள்ளது. பணி துவங்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், பணிகள் முழுமை பெறாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது, இரு சக்கர வாகன ஓட்டிகள், ஒதுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இரவு நேரத்தில், சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது தெரியாமல் பலரும் தட்டுத் தடுமாறி குழி அருகே செல்கின்றனர். மேட்டுமகாதானபுரத்தில், பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில் வரும் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து பெங்களூரு, மதுரை, திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்ந நிலையில், சாலை மோசமாக இருப்பதால், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். ஆடிபெருக்கு விழா நெருங்குவதால், சாலை அகலப்படும் பணியை அதிகரிகள் துரிதப்படுத்த வேண்டும், என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar