பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
திருவையாறு: அப்பர்பெருமானுக்கு கயிலைக்காட்சியளித்த தலமான, திருவையாறு தருமை ஆதீனத்துக்கு சொந்தமான பஞ்சநதீஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானத்தில், இன்று (25ம் தேதி) துவங்கி, இரண்டு நாட்கள் ராஜேந்திரன் சோழன், 1000வது ஆண்டு விழா நடக்கிறது. தருமை ஆதீனம் குருமகாசந்நிதானம் உத்திரவின்படி, கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஏற்பாடு செய்து வருகிறார். முதலாம் ராஜேந்திரன் அரசியார் பஞ்சவன்மாதேவியார் எழுப்பித்ததே திருக்கள்ளி தென்கயிலாயம். இங்கு தான், அப்பர்பெருமானுக்கு, கயிலைக்காட்சி கிடைத்தது. இங்குள்ள இறைவன் பெயரை தென்கயிலாய முடையார் என்றே அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்மனை, அஞ்சல் உடையார் எனக்கல்வெட்டு கூறுகிறது. முதலாம், ராஜேந்திர சோழனின் காலத்திய கல்வெட்டில், இக்கோவில் தென்கயிலாயம் என்றே குறிப்பிடப்படுகிறது. வரலாற்று சிறப்பையும், கலை சிறப்பையும் கூட்டுவதாக திருச்சுற்று மாளிகைகள் விளங்குகிறது. இம்மாளிகையை தாங்கி நிற்கும் தூண்கள், நுளம்பாடியிலிருந்து, கொண்டு வந்து கட்டப்பெற்ற, 46 தூண்கள் பல கலைநுட்பங்களை கொண்டவை. பிறநாட்டு கலைப்பொருட்களை கொண்டு வந்து, தென்கயிலாயம் எழுப்பித்த ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்க, கயிலாயமுடையார் அஞ்சலி உமையாருக்கு அபிஷேகம் ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.