முருக்கேரி : முருக்கேரியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.ஆடி மூன்றாவது ஞாயிற்று கிழமையை முன்னிட்டு முருக்கேரி நாகாத்தம்மனுக்கு நேற்று காலை 8 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் அம்மனுக்கு பூ அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்பு சாகை வார்த்தல் நடந்தது.