பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
செஞ்சி : கணக்கன்குப்பம் முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தில் கருவாட்சியார் மாந்தோப்பில் உள்ள முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 2ம் தேதி மாலை 6 மணிக்கு தேவதானறுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளும், இரவு விக்ரகங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜைகளும், சகல தேவதா அஷ்டோத்ர கதம்ப நாமாவலி பாராயணம், மூலமந்திர ஜபம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 9 மணிக்கு அய்யனாரப்பன், முனீஸ்வரன், சப்த கன்னிகைகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் 9.30 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சந்தானம் மற்றும் கிராம பொது மக்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.