புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், ரிக் மற்றும் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நாளை 10ம் தேதி நடக்கிறது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நாளை ௧0ம் தேதி, வேத சாம்ராட் ராஜா சாஸ்திரி தலைமையில், ரிக் மற்றும் யஜூர் வேத ஆவணி அவிட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 5.00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சி, மதியம் 12.௦௦ மணி வரை நடக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பூணுால் மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள் 11ம் தேதி காலை 5.00 மணி முதல் 7.00மணி வரை காயத்திரி ஜபம் நடக்கிறது.மேலும், விபரங்களுக்கு, ராஜா சாஸ்திரியை 98423-29770, 98423-27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.