பதிவு செய்த நாள்
09
ஆக
2014
02:08
காரிமங்கலம்: காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.
* பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.