Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ... காரிமங்கலம் பகுதியில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மாடுகளுக்கு வினோத திருமணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2014
02:08

பள்ளிபாளையம்; மழை வேண்டி கிராமத்தில், மாடுகளுக்கு நடந்து திருமண விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது. மக்கள் தண்ணீருக்காக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அதேபோல், போதிய தண்ணீர் இல்லாததால், பயிர்களும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். மழை வேண்டி கிராமங்களில் மண் சோறு சாப்பிடுவது, கழுதை, தவளைக்கு திருமணம் செய்து வைத்தல், வர்ண பூஜை உள்பட பல்வேறு கோணங்களில் சிறப்பு பூஜையும், வேண்டுதலையும் நடத்தி வருகின்றனர். அவ்வாறு செய்தால், மழை பொழியும் என்பது ஐதீகம். பள்ளிபாளையம் அடுத்த, பாப்பம்பாளையம் எல்லை முனியப்பன் கோவிலில், அப்பகுதி மக்கள் மழை வேண்டி, மாடுகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அவ்வாறு நடத்தி வைத்தால், ஒரு வாரத்தில் மழை பெய்யும் என்பது ஐதீகம். அதன்படி, நேற்று மதியம், 12 மணிக்கு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எல்லை முனியப்பன் கோவிலில் குவிந்தனர். அங்கு ஆண் மாட்டுக்கு வேட்டியும், பெண் மாட்டுக்கு சேலையும் அணிவிக்கப்பட்டது. மாடுகளுக்கு மாலை போட்டு, சந்தனம், பொட்டு வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. மேலும், ஹோம குண்டம் அமைத்து சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. திருமண சடங்குகள் முடிந்ததும், பெண் மாட்டுக்கு தாலி கட்டப்பட்டது. திருமணம் முடிந்ததும், அங்கு கூடியிருந்து மக்களுக்கு, விருந்து பரிமாறப்பட்டது. மழை வேண்டி மாட்டுக்கு நடத்தி வைத்த, வினோத திருமண நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar