காடம்புழா பகவதியம்மன் கோவில் கட்டுமான பணிகள் விறு விறு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2014 01:08
பாலக்காடு: தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காடம்புழா பகவதியம்மன் கோவில் கட்டுமான பணிகள், செப்டம்பர் முதல் வாரம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில், காடம்புழா பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கட்டுமான பணிகள், மூன்று கோடி ரூபாய் செலவில், 2009 மார்ச் மாதம் துவங்கியது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கூறியதாவது: கோவிலில் சுற்றுப்பிரகார பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேல் பகுதிகளில் செம்பு பூசிய தகடும், கதவுகளில் பித்தளையில் செதுக்கிய சிற்பங்களும், பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதை, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர். 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் பணிகள் முடிவடையும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால், பணிகள் நடப்பதில்லை. மற்ற நாட்களில், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.