கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் தியாகபாடி அம்மன் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகில் உள்ள தியாகபாடி அம்மன் தேர் திருவிழா நடந்தது. கடந்த 4 ம் தேதி தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை 9.00 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது. பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்றனர். கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ராஜக்கண்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.