பதிவு செய்த நாள்
19
ஆக
2014
12:08
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, 9 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வர்ணம் பூசி விற்பனைக்கு தயாராக உள்ளன. விநாயகர் சதுர்த்தி, வரும், 29ம் தேதி, கோலாகலமாக, கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி வீடுகள், தெருக்களில் வைத்து பூஜை நடத்தி, பின் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.இதற்காக, திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில், விநாயகர் சிலைகள், பல உயரங்களில் தயாராகி வருகின்றன. இதுகுறித்து, சிலை வடிவமைக்கும் குழுவின் மேலாளர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிதாராம் கூறுகையில், நாங்கள், மூன்று ஆண்டுகளாக இங்கு தங்கி, விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். 9 அடி உயரம் வரை உள்ள சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. சாக்பீஸ் பவுடரை நீரில் கரைத்து, அதை அச்சில் வார்த்து, சிலைகள் தயாரிக்கிறோம். இதை நீர்நிலைகளில் கரைத்தால் தண்ணீர் மாசுபடாது. 20 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, சிலைகள் விற்பனைக்கு உள்ளன, என்றார்.