Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல் ஒலக்கூர் கோவிலில் நாளை ... கல்யாண சுப்ரமணிய ஸ்வாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுக்கு பின் தேரோட்டம்: கோனூர் கிராம மக்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
12:08

மேட்டூர் :இரு ஆண்டுகளுக்கு பின்பு, கோனூர் சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. அதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மேட்டூர் அடுத்த கோனூரில், சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 27 கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். கோவில் பூசாரி வேங்கடத்தை மாற்றி விட்டு, வேறு பூசாரி நியமிக்க, சுற்றுப்பகுதி கிராம மக்கள் விரும்பினர்.எனினும், வேங்கடம் பூசாரியாக நீடித்ததால், இரண்டு ஆண்டுகளாக கோவில் தேரோட்டம் நடக்கவில்லை. இரு வாரத்துக்கு முன்பு, கோவில் நிர்வாகத்தை, தங்கள் கட்டுப்பாட்டில், இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது. மேலும், பூசாரி வேங்கடத்தின் மீது, இரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவரை சஸ்பென்ட் செய்து, ஜெயகுமார் என்பவரை, தற்காலிக பூசாரியாக நியமித்தது.அதனால், சில ஆண்டுகளாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு தேரோட்டத்தை நடத்த, பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மாலை, சென்றாய பெருமாள் கோவில் தேர்பவனி துவங்கியது. தேரை, அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, எம்.எல்.ஏ., பார்த்திபன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.தேர், கோனூர், பொறையூர், சந்தைதானம்பட்டி, மோட்டூர், ஆண்டிக்கரை உள்பட, 27 கிராமங்களுக்கு சென்று, இரவு நிலையை சேர்ந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவில் மற்றும் தேர் செல்லும் பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளை, தக்கார் ரமணிகாந்தன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar