தேனி: வரும் ஆகஸ்ட் 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயிலில் இந்து முன்னணியினர் விரதம் மேற்கொண்டனர். மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். விநாயகர் சிலை கமிட்டி பொறுப்பாளர்கள் 120 பேர் விரதம் தொடங்கினர்.