பதிவு செய்த நாள்
01
செப்
2014
11:09
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவா – விஷ்ணு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கிருபானந்த வாரியார் பஞ்சலோக சிலைக்கு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ளது, சிவா – விஷ்ணு கோவில். இந்த கோவிலில், முருகப்பெருமானின் பக்தராகிய, திருமுருக கிரு பானந்த வாரியாரின் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி காலை 6:00 மணிக்கு பூ ர்ணாஹூதியும், கலசாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின் காலை 10:00 மணிக்கு, செல்வவிநாயகர் வீதி உலாவும், மாலை 7:00 மணிக்கு பூ ர்வாங்கம், சயனாதிவாசனமும் நடந்தது. அதன்பின், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு யாகசாலை அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு கும்பாலங்காரம், முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜையும், மகா பூர்ணதர்கள், நெய் தீபம் ஏற்றி, வழிப்பட்டு வருகின்றனர். இதுவரை, கோடி நெய் தீபம் திட்டத்தில், 27 லட்சத்து 30 ஆயிரம் நெய் தீபங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.