காரைக்கால்: திருநள்ளார் இளையாங்குடி கிராமத்தில் உள்ள மாறநாயனார் முக்தியடைந்த ஸ்தலம் கொண்ட வனநந்தீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் இளையாங்குடி கிராமத்தில் மிக பழைமையான ஏலவார் பூங்குழலி சமேத அருள் மிகு வனநந்தீஸ்வர் கோவிலில் மாறநாயனார் முக்தியடைந்த ஸ்தலம் கொண்ட கோவிலில் நேற்று காலை வனநந்தீஸ்வரும் மற்றும் சுற்றி உள்ள அம்மன், விநாயகர், முருகன், துர்கை, எல்லை அம்மன் உள்ளிட்ட ஆலாயங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிகழ்ச்சி ஏற்படுகளை இளையான்குடி கிராமத்தினர் செய்தனர்.
இதுப்போல்... காரைக்கால் நெடுங்காடு குரும்பகரத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள்,முத்துமாரியம்மன்,காளியம்மன்,ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கும்பாபிசேகம் நடந்தது. நெடுங்காடு சாலை குரும்பகரத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள்,முத்துமாரியம்மன்,காளியம்மன்,ஜெயசக்திஆஞ்சநேயர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தனத்தில் நேற்று காலை விஸ்வரூபம் மூன்றாம் கால ஹோமம் பூஜை கடங்கள் புறப்பாடு காலை 10மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம்,தீபாராதனை நடந்தது.இதில் அமைச்சர் சந்தரகாசு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.