பதிவு செய்த நாள்
17
செப்
2014
12:09
திருப்பூர் : திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், மலர் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை நடந்தது.
மாலை 6.00 மணிக்கு, தாயார்களுடன் வீரராக பெருமாள் மற்றும் குழந்தை கிருஷ்ணர் எழுந்தருளினார்.கிருஷ்ணனை, மலர் ஊஞ்சலில் அமர வைத்து பால், நெல்லிக்காய், கலாக்காய், அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை நிவேதனம் செய்து, மலர் ஊஞ்சலில் வைத்து பட்டாச்சார்யார்கள் தாலாட்டினர். இன்று காலை, சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை, மாலை 6.00 மணிக்கு, கோலாட்டம், கும்மியாட்டத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா மற்றும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும், ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்து வரும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.