Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை: வீரராகவர் கோவில் ... சித்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்து நாள் நவராத்திரி விழா இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
12:09

பத்து நாள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இன்று துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. காளிகாம்பாள் கோவில்: பாரிமுனை, தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும், சிறுமியர் மற்றும் சுமங்கலிகளை, அம்மனாக பாவித்து, அவர்களுக்கு அலங்காரம் மற்றும் பாதபூஜை நடத்தப்படும். சென்னமல்லீஸ்வரர் கோவில்: பாரிமுனை, தேவராஜ முதலி தெருவில் உள்ள, பிரமராம்பிகை சமேத சென்னமல்லீஸ்வரர் கோவிலில், தினமும் மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடத்தப்படும். அத்துடன், தினமும் வடமாநில, தாண்டியா உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்
: தங்கசாலையில் உள்ள காமாட்சிஅம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். அத்துடன் கொலுவும் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. மல்லிகேஸ்வரர் கோவில்: மண்ணடி, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று காலை 9:00 மணிக்கு கொடிஏற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் மரகதாம்பாள் தினமும், கவுரி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். அத்துடன் இரவு, 7:00 மணியளவில், கொலு மண்டபத்தில் பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

கன்யகா பரமேஸ்வரி கோவில்: கொத்தவால் சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணிக்கு கலச பூஜை நடக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளுவார். கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன், ஒன்பதாம் நாளன்று சண்டிஹோமம், சுமங்கலி பூஜை மற்றும் குண்டப்பிரவேசம் நடக்கும். பத்தாம் நாளான விஜயதசமியன்று, இரவு, 7:00 மணிக்கு, கன்யகா பரமேஸ்வரி அம்மனின் பாரிவேட்டை நடக்க உள்ளது. இதேபோல், மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவான்மியூர் மருந்தீசுவரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும், மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும், நவராத்திரி விழா இன்று துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar