Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் ... சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா கொழுபொம்மை விற்பனை "ஜோர்: விலை உயர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
01:09

பழநி : நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநிபகுதியில் கொழுவைக்க பொம்மைகள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிவிழா நடக்கும் 9 நாட்களும் வீடுகள், கோயில்கள், தனியார் நிறுவனங்கள், மண்டபங்களில் கொழு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜையுடன் வழிபாடுசெய்வது வழக்கமாகும். இந்த ஆண்டு செப்., 24 முதல் அக்., 3 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதன்காரணமாக கொழுவில் இடம்பெறும் பொம்மைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட பொம்மையின் விலை ரூ.50 வரை அதிகரித்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த வடிவேல் கூறுகையில்,"" கடந்த 20 ஆண்டுகளாக, பழநி தெற்குரதவீதியில் நவராத்திரி விழா, கொழுவில் வைக்கப்படும், வித,விதமான சுவாமிபொம்மைகள், சித்தர்கள், புராணகதைகளின் நாயகர்கள் உட்பட பல்வேறு பொம்மைகளை, தஞ்சாவூர் பகுதியில் மொத்தமாக வாங்கி விற்கிறோம். இந்த ஆண்டு வண்டி வாடகை மற்றும் மண் பற்றாக்குறை காரணமாக பொம்மைகளின் விலை அதிகரித்துள்ளது. எங்களிடம் தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்படுவது, ஒளவையார் நாவல் பழம் கேட்பது, அகத்தியர், கிரகலட்சுமி, பிரதோஷ சிவன் செட் என ரூ.100 முதல் 3000 வரை தனித்தனிபொம்மைகளாகவும், குழுவாகவும் உள்ளன. புதிய வரவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3000 ஆகும். ஒருசிலர் தனிபொம்மைகளை வாங்கி கோயில் கொழுவில் வைப்பதற்காக கொடுக்கின்றனர். வீட்டில் வைப்பதற்காகவும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar