தாடிக்கொம்பு ; தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது. தன்வந்திரி பெருமாள் சுவாமிக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அபிஷேக தைலம் மற்றும் லேகியம் பிரசாதமாக வழங்கப்பட்டது.