முத்தாரம்மன் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2014 10:09
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சிறப்பாக நடக்கும். பக்தர்கள் மாறு வேடம் பூண்டு, காணிக்கை பிரித்து கோயிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந்நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்பார்கள்.கொடியேற்றம்: நேற்று முன் தினம் மாலை அம்மனுக்கு காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மகிஷாசுர வதம்: அக்., 3ம் தேதி அம்மனுக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன், அம்மன் சிம்ம வாகனத்தில், குல சேகரப்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளுவார். இரவு 12 மணிக்கு மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி கணேசன் செய்து வருகின்றனர்.