விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மகாளய அமாவாசையொட்டி, விருத்தாசலம் சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, புத்து மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உள்பிரகார வலம் வந்து அருள்பாலி த்தார். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.