விருத்தாசலம்: புரட்டாசி நான்காம் சனிக்கிழமையொட்டி, விருத்தாசலம் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்ய பாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் ராஜகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.