Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே கிராமத்தில் 7 கோயில்களில் ... பழநி கோயில் உண்டியலில் ரூ.1.30 கோடி காணிக்கை! பழநி கோயில் உண்டியலில் ரூ.1.30 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை நாளை மாலை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 அக்
2014
12:10

நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. நாளை மறுநாள் காலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.நாளை மாலை 5.30-க்கு மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை மறுநாள் காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமமும், அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளும் நடைபெறும்.

மேல்சாந்தி தேர்வு : காலை 7.30-க்கு உஷபூஜை முடிந்ததும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற பட்டியலில் இருந்து ஒருவர் ஐயப்பன் சன்னதியில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இதுபோல் மாளிகைப்புறம் கோயிலிலும் ஒருவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இந்த ஆண்டு சபரிமலைக்கு 9 பேரும், மாளிகைப்புறத்துக்கு 5 பேரும் தேர்வாகியுள்ளனர். அவர்கள் விபரம்:

சபரிமலை: இ.என். கிருஷ்ணன் நம்பூதிரி, திருச்சூர், எம்.பி. கிருஷ்ணன்நம்பூதிரி, திருவனந்தபுரம், டி.கே. ஸ்ரீதரன்நம்பூதிரி, திருவல்லா, பி.இ. மனோஜ், கோழிக்கோடு, எஸ். கேசவன்நம்பூதிரி, மாவேலிக்கரை, டி.எம். முரளிதரன், பாலக்காடு, கே. நாராயணன்நம்பூதிரி, தொடுபுழா, எம்.பி.அஜய்கிருஷ்ணன், ஆலப்புழா, வி.என். மகேஷ், மூவாற்றுப்புழா.

மாளிகைப்புறம்: என்.கே. ராமன்நம்பூதிரி, சாலக்குடி, பி.இ. மனோஜ், கோழிக்கோடு, எஸ். கேசவன் நம்பூதிரி, மாவேலிக்கரை, வி.என். மேகஷ்,எர்ணாகுளம், எம்.பி. அஜய்கிருஷ்ணன், ஆலப்புழா. வழக்கமாக எல்லா தமிழ்மாதமும் ஐந்து நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் இந்த மாதம் ஆறு நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 23-ம் தேதியும் நடை திறந்திருக்கும். 18 முதல் 22 வரை தினமும் சகஸ்ரகலச பூஜைகளும், உதயாஸ்தமன பூஜையும் இரவு ஏழு மணிக்கு படிபூஜையும் நடைபெறும். 23-ம் தேதி திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக நவ.,16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar