கோவிலில் பாலஸ்தாபன பூஜை; சிவாச்சாரியார்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2014 11:10
ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி பாலஸ்தாபன பூஜை நடக்கிறது காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை பாலஸ்தாபன திருப்பணி நடக்கிறது. இதில், தஞ்சாவூரில் இருந்து சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளனர். உள்ளூர் பூஜாரிகளும் பங்கேற்று வழிபாடுகளை நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர், மானஸ் அமைப்பினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.