குருவாயூர், ராஜராஜேஸ்வரம் கோவில்களுக்கு ஆனந்த் அம்பானி 6 கோடி ரூபாய் நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2026 01:04
குருவாயூர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராஜராஜேஸ்வரம் மற்றும் குருவாயூர் கோவில்களுக்கு 6 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்ததுடன், கிழக்கு கோபுரத்தை சீரமைப்பது உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளுக்காக 12 கோடி ரூபாயை ஒதுக்குவதாகவும் உறுதியளித்தார். மேலும், குருவாயூரில் யானைகளின் நலனுக்கான முன்னெடுப்புகளுக்கு குறிப்பாக அவற்றின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த கூடுதல் ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.