Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. ... எல்லையம்மன் கோவிலில் நவசக்தி சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி விழா இன்று திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2014
03:10

தேனி : கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டனர்.இன்று(அக்.30) திருக்கல்யாணம் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தேனி கணேசகந்த பெருமாள் கோயிலில் காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இது போல் பெத்தாஷி விநாயகர் கோயில்,தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சுப்பிரமணியர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டிவிழா அக்.,24ல் மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி, சுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.மூன்று கொடி மரங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தர்கள் விரதம்: பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் விரதம் மேற்கொண்டிருந்தனர். நேற்று பாலசுப்பிரமணியர் சூரசம்ஹாரம் நடத்தி அசுரர்களளை வதம் செய்தார்.இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. பால்குடம் வழிபாடு: கந்தசஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. ஆறாம் நாள் நிகழ்ச்சியான நேற்று நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். அவர்கள் கோயிலில் இருந்து பிரதான வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து சுந்தரவேலவருக்கு சிறப்பு அபிஷேகமும், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது.மாலை 6 மணிக்கு சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar