சிதம்பரம்: சிதம்பரம், பாம்பன் சுவாமி மடம் ஆறுபடை வீடு கோவிலில் மகா கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந் தது. சிதம்பரம், சபாநாயகர் தெரு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடம் ஆறுபடை வீடு முருகர் கோவிலில் 103ம் ஆண்டு மகா கந்தசஷ்டி பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடவன் துவங்கியது. தினசரி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம் வந்தனர். இரவு வள்ளி-தெய்வானை சமேதராக முருகர் தேரில் வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடியப்படி வந்தனர். நேற்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண <<உற்சவம் நடந்தது. பின்னர் சுவாமி புறப்பாடாகி வைப்புச்சாவடி, அம்மாப்பேட்டை பகுதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.