Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... பாம்பன் சுவாமி மடத்தில் திருக்கல்யாணம் உற்சவம்! பாம்பன் சுவாமி மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
12:10

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம்  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  பங்கேற்றனர். நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது.முருகப்பெருமானின் அவதார ÷ நாக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்துõரில் சூரனை சம்ஹாரம்  செய்ததாக கந்த புராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற,  இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 23 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர், ஆட்டுக்கிடா, தங்கமயி ல்,வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிழ்ச்சியான சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி,கடந்த 28 ம் தேதி இரவு நடந்தது.முருகப்பெருமான்,அன்னையிடம்  சக்திவேல் வாங்கியவுடன் மானிடருக்கு வியர்ப்பது போன்று முருகனின் திருமேனியெங்கும் வியர்த்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.  தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன், கோவிலில் இருந்து எழுந்தருளி சூரன்  போருக்காக காத்திருந்த இடம் நோக்கி ஆவேசத்துடன் வந்தார்.ஒரு கையில் ஆட்டின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டும்,மறுகையில் வேல்நெடு ங்கண்ணியிடம் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேலுடன்  சூரனை நெருங்கியவர், கஜமுகம்,சிங்கமுகம்  தாங்கி வந்த சூரனை வதம் செய்தார்.  சூரனை வதம் செய்து முடித்ததும் சிங்காரவேலவர் இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்  கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar