Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சீசன்: வேட்டி, மாலை விற்பனை ... சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீசுவரர் கோவில் ரூ.15 கோடி பாக்கி வசூல் எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2014
02:11

மயிலாப்பூர்: கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான மனைகள், வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து, 15 கோடி ரூபாய் வரை, வாடகைதாரர்கள் பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முறைப்படுத்தும் திட்டத்தில், பங்கேற்காதோர், டிச., 31ம் தேதிக்கு பின் வெளியேற்றப்படுவர் என, அறநிலைய துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, மயிலாப்பூரில் பல்வேறு இடங்களில், வீடுகள், கடைகள் என 800க்கும் மேற்பட்ட அசையா சொத்துக்கள் உள்ளன. இவை வருவாய் ஈட்டும் நோக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

நிலுவை: தற்போதைய நிலவரப்படி, இந்த கட்டடங்களை பயன்படுத்துவோரில், 500க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள், பல ஆண்டுகளாக கோவிலுக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இதனால், கோவிலுக்கு, 15 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வசூலாக வேண்டியுள்ளது. வாடகை பாக்கியை வசூலிக்கவும், வாடகைதாரர்கள் குறித்த உண்மை நிலவரத்தை சேகரித்து ஆவணங்களில் சேர்க்கவும் முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து வாடகைதாரர்கள், அறநிலைய துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டம்: அதில், 200க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் பங்கேற்றனர். முறைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்று நிலுவையை செலுத்தி பயன் பெறுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.இதன்படி, கடந்த பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளோர், 15 மடங்கு வாடகையை நன்கொடையாகவும், 10 மாத வாடகையை முன்பணமாகவும் செலுத்தினால், இத்திட்டத்தில் பயன்பெறலாம். அவர்களது கணக்குகள் முறைப்படுத்தப்படும்.வரும், டிச., 31ம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். அதற்கு பின்பும், நிலுவை செலுத்தாமல், பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளோர், அந்தந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு, அறநிலைய துறை அதிகாரிகள், தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar