Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜனவரியில் பிரதமர் மோடி சபரிமலை ... டிச.6 சபரிமலையில் பாதுகாப்பு கவுண்டவுன் தொடக்கம்! டிச.6 சபரிமலையில் பாதுகாப்பு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மாளிகைப்புறம் கோயிலில் ஆசாரங்களை மீறாதீர்: மேல்சாந்தி வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

சபரிமலை: ’சபரிமலை மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சளை தூவியும், துணிகளை வீசியும் ஆசாரங்களை மீறக்கூடாது’ என பக்தர்களுக்கு மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி கட்டில் ஒரு முடியில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் தேங்காய் மற்றும் பச்சரிசி போன்ற பொருட்கள் இருக்கும். இரண்டாவது முடியில் அவல், பொரி, மஞ்சள், குங்குமம், திருநீறு, பன்னீர் போன்ற பொருட்கள் இருக்கும். பக்தர்கள் மஞ்சள் பொடியை மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதி, அதன் பின்னால் உள்ள நாகர் பிரதிஷ்டைகளில் தூவுகின்றனர். குங்குமத்தை நவக்கிரக மண்டபத்தை சுற்றி தூவுகின்றனர். இது ஆசாரங்களுக்கு எதிரானது என்று மாளிகைப்புறம் மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்கள் ஆசாரங்களுக்கு விரோதமாக நடக்கக்கூடாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு கொண்டு வரும் பொருட்களை தேவிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இங்கு மஞ்சள், குங்குமம், திருநீறு போன்றவற்றை தூவுவது, கோபுரத்தின் மீது பிளவுஸ் துணிகளை வீசுவது போன்றவை ஆசாரங்களுக்கு எதிரானது. ஆடைகளை கோயிலில் சமர்ப்பித்தால் போதும். அதை தந்திரியோ, மேல்சாந்தியோ தேவிக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar