Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாசியால் மாசடையும் மதுரை மாரியம்மன் ... சிவலோகநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா! சிவலோகநாதர் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேணுகோபால சுவாமி கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் நித்ய பூஜை துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 டிச
2014
11:12

சொரக்காய்பேட்டை: பாமா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின், தற்போது நித்ய பூஜை துவங்கியுள்ளது. மார்கழி உற்சவம் நடத்த, கிராமவாசிகள் ஆதரவு கோரப்பட்டு உள்ளது. சொரக்காய்பேட்டை அடுத்த, மேலபூடி கிராமத்தின் மைப்பகுதியில் அமைந்துள்ளது, பாமா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவில். 400 ஆண்டு கள் பழமையான இந்த கோவிலில், கடந்த 1911ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

காரணம் என்ன?: இந்த தகவல், கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. கார்வேட் நகர ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதற்கான ஆதாரமாக, அவர்களின் முத்திரை கல்வெட்டு, கோவில் சுற்றுப்பிரகாரத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ளது. நுாறாண்டுகளுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும், 18 ஆண்டுகளாக நித்திய பூஜை நடைபெறாமலும் பூட்டிக்கிடந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், கடந்த ஆண்டு தங்களின் பொறுப்பில் எடுத்து கொள்ள கிராமவாசிகளை அணுகியது. ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை.அதை தொடர்ந்து, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.

மார்கழியில் உற்சவம்: இந்நிலையில், கிராமவாசிகளின் முயற்சியின் பேரில், தற்போது சனிக்கிழமைகளில் பஜனை நடத்தவும், நித்ய பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்கழியில் உற்சவம் நடத்தவும், பகுதிவாசிகளின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar