Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிச.6 சபரிமலையில் பாதுகாப்பு ... சபரிமலையில் இறுகும் பாதுகாப்பு வளையம்! சபரிமலையில் இறுகும் பாதுகாப்பு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
அன்னதானம் சேவையில் ஐயப்ப சேவாசங்க தொண்டர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 டிச
2014
11:12

சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஐயப்ப சேவாசங்கத்தின் தொண்டர்கள் அன்னதானம் வழங்குவது உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஐயப்ப சேவா சங்கம் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்து வருகிறது. சன்னிதானத்திலிருந்து மாளிகைப்புறம் செல்லும் பகுதியில் ஐயப்ப சேவா சங்கம் செயல்படுகிறது. நடை திறந்திருக்கும் எந்த நேரத்தில் சென்றாலும் இங்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும். காலையில் உப்புமா, பொங்கல், கஞ்சி, மதியம் சாப்பாடு கிடைக்கிறது. இரவு கஞ்சி கிடைக்கும். பக்தர்கள் வயிறார சாப்பிடலாம். பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் அரிசி, காய்கறியால் இந்த சேவை நடக்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறி வருகிறது. சேவா சங்கம் பயன்படுத்தியது போக எஞ்சியுள்ள காய்கறிகள் தேவசம்போர்டு அன்னதானத்துக்கு வழங்கப்படுகிறது. மூன்று ’ஷிப்டு’களில் 40 சமையல் கலைஞர்கள் இடைவிடாது சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் மட்டுமின்றி பம்பை, நிலக்கல் மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளிலும் சேவாசங்க அன்னதானம் நடக்கிறது. மேலும் பக்தர்களின் தாகம் தீர்க்க மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை 24 மணி நேரமும் விநியோகம் செய்கின்றனர். சபரிமலை வரும் வாகனங்களின் பழுது நீக்கும் பணியையும் முன்னணி வாகன கம்பெனிகளுடன் இணைந்து இலவசமாக செய்கிறது. உதிரி பாகங்கள் தேவைப்பட்டால் அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதுதவிர உடல் நலம் பாதிக்கப்பட்டோரை ஸ்டிரெச்சர் மூலம் மருத்துவமனை, பம்பைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கும் உதவுகிறது. சன்னிதானத்தில் யாராவது இறந்தால் அவர்கள் உடலை பம்பைக்கு கொண்டு சென்று சேர்க்கும் சேவையையும் செய்கிறது. இப்பணியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பக்தசேவையில் ஈடுபட்டுள்ள ஐயப்ப சேவா சங்கத்துக்கு சன்னிதானத்தில் போதுமான இடவசதி இல்லை என, கேம்ப் அதிகாரி அப்பண்ணாசாமி, வரவேற்பு அதிகாரி பாலன் தெரிவித்தனர்.

போலீஸ் பாதபலம்:
சபரிமலையில் நேற்று இரண்டு கால்கள் செயல் இழந்தாலும் ஐயப்பனை வணங்கும் ஆர்வத்தில் இருமுடி கட்டு ஏந்தி வந்த பக்தரை போலீசார் தூக்கி வந்து 18ம் படியருகே தேங்காய் உடைக்க உதவி செய்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar