செஞ்சி: செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் செய்தனர். பகல் 12 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும், இரவு 7 மணிக்கு சித்தர் பூஜையும், 8 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், 1008 சகஸ்ர நாம அர்ச்சனையும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈஸ்வர சிவம் பூஜைகளை செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.