திருப்பரங்குன்றம் கோயிலில் ஜன. 21ல் தெப்பத் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 05:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன. 21ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடங்கும் வகையில் ஜன. 20ல் கோயில் கம்பத்தடி மண்டத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு பூஜைகள் நடக்கும். ஜன. 21 காலை 10.30 முதல் காலை 11 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஜன.29ல் தைக் கார்த்திகையும், காலை 10 மணிக்கு சிறிய வைரத் தேரோட்டம். ஜன. 30 அன்று ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி காலை, மாலையில் தலா மூன்று சுற்றுக்கள் சுற்றி தெப்பத்திருவிழாவும், ஜன. 31ல் தீர்த்த உற்சவம் நடக்கும்.