Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஜன. 21ல் ... சிதம்பரம் திருப்பாற்கடல் குளம்: பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு! சிதம்பரம் திருப்பாற்கடல் குளம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெய் அபிஷேகம் நிறைவு; இன்று குருதி பூஜை:நடை நாளை அடைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
11:01

சபரிமலை:சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. இன்று இரவு 10.30 மணிக்கு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படும்.

மண்டல,- மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடைபெற்று வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நிறைவு பெற்றது. பின், கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களப பூஜை நடத்தினார். பிரம்ம கலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். ஐயப்பன் விக்ரகத்தில் களப அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடந்தது.

மகரவிளக்கு நடந்த ஜன.,14 முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் யானை மீது 18-ம் படி முன் எழுந்தருளினார். நேற்று சரங்குத்தி வரை சென்ற இந்த பவனி கோயிலுக்கு திரும்பியது.இன்று காலை 10 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய் அபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10.30 மணிக்கு மாளிகைப் புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெற்றது. இன்று இரவு 10 மணிக்கு பின் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.

நாளை காலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி மகயிரம் திருநாள் கேரளவர்மா ராஜா ஸ்ரீகோயில் முன்புறம் வருவார். அவரது முன்னிலையில் கோயில் நடைஅடைத்து சாவியையும், பணமுடிப்பையும் மேல்சாந்தி கொடுப்பார். அதை பெற்றுக் கொண்டு 18-ம் படிக்கு கீழே வரும் அவர், மீண்டும் மேல்சாந்தியிடம் சாவியை கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி செல்வார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar