Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்றத்து கோயிலில் இன்று நடை ... சீவலப்பேரி காசிவிஸ்வநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா கணபதி கோயில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
11:06

திருநெல்வேலி : மேலக்கல்லூர் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா பூஜைகள் இன்று (16ம் தேதி) துவங்குகிறது. சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. மகா கணபதியை குல தெய்வமாக அதே ஊரைச் சேர்ந்த பலரும் வழிபட்டு வருகின்றனர். வெளியூர்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் கடந்த 6 மாதமாக நடந்துவந்தது. கோயிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் பிரதிஷ்டையும் நடைபெறவுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (16ம் தேதி) மாலை கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை (17ம் தேதி) காலை 7.30 மணிக்கு சுவாமி அனுக்கை, பிராம்ண அனுக்கை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம், பூர்வாங்கம், கணபதிஹோமம், நவக்கிரஹ சாந்திஹோமம், மாதுரு யோகினி பூஜைகள், ஆச்சார்ய ரிக்விக் வர்ணம், யாகசாலை நிர்மாணம் நடக்கிறது. மாலையில் மிருத்ஸங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடக்கிறது. 18ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஜெபம், ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, விக்ரகம் ரத்ன நிவாஸம், மூர்த்தி மருந்து சாத்துதல், பிம்பம் சுத்தி, கர்ப்பக்கிரஹ சுத்தி, நேத்ரோன்மீலனம், சயனாதிவாஸம் பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவான 19ம் தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் கால பூஜை, ஸ்பர்ஸாஹூதி, கலச யாத்ரா நடக்கிறது. காலை 11.15 மணிக்கு வேதமந்திரங்கள், பஞ்சவாத்யம் முழங்க கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகருக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் மகாபிஷேகம் நடக்கிறது. ராதாகிருஷ்ணன் பஜனை மண்டலியின் பஜனையும், இரவு அர்ச்சனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் கே.வி.சங்கரன், பொருளாளர் ராமச்சந்திரன், தணிக்கையாளர் ராமசுப்பிரமணியன், செயலாளர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன், பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar