Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா கணபதி கோயில் கும்பாபிஷேக ... ராகு ஸ்தலம் தென் காளகஸ்தி கோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீவலப்பேரி காசிவிஸ்வநாதர் கோயிலில் 19ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
11:06

திருநெல்வேலி : சீவலப்பேரி காசிவிஸ்வநாதர் (சிவன்) கோயிலில் வரும் 19ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. சீவலப்பேரியில் பழமைவாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து பக்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிருங்கேரிமடம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 17ம் தேதி காலை மகா கணபதிஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி ஹோமம், சுதர்ஸன ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. 18ம் தேதி அஸ்த்ர ஹோமம், மூர்த்திஹோமம், திக் ஹோமம், பஞ்ச கவ்ய பூஜை, அன்று மாலை தீர்த்தம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் யாகசாலை பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலை 6 மணிக்கு ஸோம கும்ப பூஜை, மண்டப பூஜை, சூர்ய பூஜை, சுவாமி, அம்பாள் காப்பு கட்டுதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, திருமுறை விண்ணப்பம், யாத்ரா ஹோமம் நடக்கிறது. காலை 10.40 மணிக்கு வேதமந்திரங்கள், மேளதாளம், பஞ்சவாத்யம் முழங்க கும்பம் புறப்பாடு நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 12 மணிக்கு சுவாமி, அம்பாள் கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம், தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் இணை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் முத்துதியாகராஜன், உதவிஆணையர் பொன்.சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், சிருங்கேரிமடம் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வி.ஆர்.கவுரிசங்கர் மற்றும் சீவலப்பேரி காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பக்தர்களுக்கு அழைப்பு : கும்பாபிஷேக விழாவிற்கு தேவையான பூஜைப் பொருட்களான ஹோம சாமான்கள், அபிஷேக பொருட்கள், பால், தயிர், இளநீர், நெய், சூடன், பத்தி, பூக்கள் போன்ற பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம் என திருப்பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் விபரம் அறிய கணேசன் 97905-40899, காசிவிஸ்வநாதன் 94431-57065 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar