Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசை நாளில் சண்முகநதியில் ... கைலாசா பிரம்மா கோவிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை: பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2015
12:01

பெத்தநாயக்கன்பாளையம் : ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், தை அமாவாசை முன்னிட்டு சன்னாசி வரதபெருமாள் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில் உள்ள, மலை அடிவாரத்தில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீஞாலகிரி சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. இங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், "தை அமாவாசை நாளில் தான், ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஓலப்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமிக்கு கோவில் அமைத்து, தை அமாவாசையில் தேர்த்திருவிழாவை நடத்தி வருகின்றனர்.தை அமாவசை நாளான, நேற்று, மாலை, 3.30 மணியளவில் சன்னாசி வரதன் ஸ்வாமி, வேணுகோபால் ஸ்வாமியின் இரண்டு தேர்களை, விழாக் குழுவினர், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரண்டு தேர்களும் பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கரகோஷம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தன. மாலை, 6 மணியளவில், தேர் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.

அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமி, ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட ஸ்வாமிகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், மல்லியக்கரை, தம்மம்பட்டி, ராசிபுரம், தலைவாசல், வீரகனூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தளவாய்பட்டி நண்பர்கள் குழு சார்பில், 7,000 பக்தர்களுக்கும், பக்தர்கள் குழு சார்பில், 15 ஆயிரம் பேர் என, மொத்தம் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar