நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் ரதசப்தமி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 26ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி வீதி உலா சென்று கெடிலம் நதிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பகல் 12:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சுவாமி, தனி அம்மன், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 11:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாக அறங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழாக்குழவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.