Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி தைப்பூச விழா! வள்ளலார் திருஅறை: பக்தர்கள் தரிசனம்! வள்ளலார் திருஅறை: பக்தர்கள் தரிசனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் 17ம் தேதி நாட்டியாஞ்சலி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2015
10:02

சிதம்பரம்:சிதம்பரத்தில் மகா சிவராத்திரியையொட்டி, ஒரே சமயத்தில், இரண்டு இடங்களில் நாட்டியாஞ்சலி விழா, வரும் 17ம் தேதி துவங்குகிறது.

கர்நாடக சங்கீதத்திற்கு திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போல, நாட்டியத்திற்கான விழாவாக நடராஜர் ஆனந்த நடனமாடிய சிதம்பரத்தில், 1981ல் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.மூத்த வழக்கறிஞர்கள் சம்மந்தம், நடராஜன், சென்னை நாகசாமி உள்ளிட்ட பலர் ஒருங்கிணைந்து, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று துவங்கி, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் வாயில் அருகே விழா நடந்து வருகிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 34ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, மகா சிவராத்திரியான வரும், 17ம் தேதி தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் துவங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு, நாட்டியாஞ்சலி விழாவிற்கு போட்டியாக, நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் அமைப்பு சார்பில், போட்டி நாட்டியாஞ்சலி விழா முதல் முறையாக நடக்க உள்ளது.இந்தப் போட்டி நாட்டியாஞ்சலியும், அதே மகா சிவராத்திரி தினமான, 17ம் தேதி கோவில் கிழக்கு கோபுரம் அருகே நடக்கிறது. தீட்சிதர்களின் இந்த திடீர் முடிவால், சிதம்பரத்தில் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, 33 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் நடத்தியதை, பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திடீர் தடை விதித்து, போட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்த திட்ட மிட்டுள்ளது, நாட்டியாஞ்சலி புனித தன்மை குறையும் வாய்ப்பு அதிகரித்துஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வில்வ ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நல்லுாரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில் உள்ள முகாமில், ... மேலும்
 
temple news
சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு இன்று மகா கும்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar