ரிஷிவந்தியம்: குளத்தூர் எல்லைபகுதியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டிபக்தர்கள் காவடி தூக்கி கிரிவலமாக சென்றனர். ரிஷிவந்தியம் அடுத்த குளத்தூர் எல்லை பகுதியில் விஸ்வரூப ஆறுமுருப்பெருமான் கோவில் உள்ளது.
தைப்பூசத்தையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. யாக வேள்வியில் பக்தர்கள் மிளகாய் ஹோமம் செய்னர். பின்னர் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி தூக்கி கோவிலை சுற்றி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சின்னதம்பி சுவாமி செய்திருந்தார்.