பதிவு செய்த நாள்
06
பிப்
2015
12:02
ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில், மஹா கணபதி, தண்ணீர்பந்தல் மாரியம்மன், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 9ம் தேதி நடக்கிறது.ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில், மஹா கணபதி, தண்ணீர்பந்தல் மாரியம்மன் கோவிலில், வரும், 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, நாளை (ஃபிப்.,6) கிராம சாந்தியுடன் விழா துவங்குகிறது.
7ம் தேதி கணபதி ஹோமம், நகக்கிரஹ ஹோமம், கோபுர தானியம் நிரப்புதல், காவிரிதீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் பூஜை, எஜமான ஸங்கல்ப்பம், புண்யாகவாசனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், தண்ணீர்பந்தல் மாரியம்மன் யாகசாலைக்கு புறப்படுதல். காயத்ரி ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.தொடர்ந்து, 8ம் தேதி வேதபாராயணம், ருத்ரபாராயணம், லலிதாசகஸ்ரநாமம், தமிழ்மறை ஓதுதல், தத்வ ஹோமம், மூலமந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், குபேர மஹாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாரதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து, புதிய சிலைகள் ஊர்வலம் வருதல், தன பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், கோபுரம் கண் திறப்பு, மூன்றாம் கால யாகவேள்வி பூஜை, மூலஸ்தானத்தில் தீபம் ஸ்தாபனம் செய்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வரும், 9ம் தேதி வேதபாராயணம், நான்காம் காலயாகபூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
மஹா கணபதி, தண்ணீர்பந்தல் மாரியம்மன், பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது.