பதிவு செய்த நாள்
06
பிப்
2015
12:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், காமாட்சி அம்மன் மற்றும் தேவாதி அம்மன், ஆறாம் ஆண்டு ஆராதனை விழா, இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
கிருஷ்ணகிரி நகர, 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் சார்பில், காமாட்சி அம்மன் மற்றும் தேவாதி அம்மன், ஆறாம் ஆண்டு ஆராதனை விழா, இன்று (பிப்.,6) துவங்குகிறது.முதல் நாளான இன்று காலை, 6 மணிக்கு, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், வடமாலை சிறப்பு பூஜை மற்றம் வெங்கட்ரமண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. 8.30 மணிக்கு பழையபேட்டை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் அர்ச்சனை வழிபாடு நடக்கிறது.
10 மணிக்கு ராயப்ப முதலி தெரு காவலர் குடியிருப்பு வளாகத்திலுள்ள முத்து விநாயகர், துர்க்கையம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தல், அலங்காரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஆராதனை வழிபாடு செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.காலை, 11.30 மணிக்கு சுமங்கலி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. மதியம், 1 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து, 2014ம் ஆண்டு உபயம் வழங்கியவர்களை கவுரவித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.இரண்டாம் நாளான நாளை காலை, 7.30 மணிக்கு கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள டி.சி.ஆர் பள்ளி அருகிலுள்ள மாந்தோப்பில், தேவாதி அம்மன் சக்தி பூஜை நடக்கிறது.
மதியம், 1.30 மணிக்கு தேவாதி அம்மன் சிறப்பு விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி நகர, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.