கல்லல் : கல்லல் அருகே புலிக்குத்தியில் காமாட்சி அம்மன், ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.3ல் இக்கோயில் கும்பாபிஷேக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. பிப்.5ல் காலை 6 மணிக்கு 4ம் கால யாகபூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 9 மணிக்கு காமாட்சி அம்மன் கோபுர கலசம், காலை 11 மணிக்கு ஐயனார் கோயில் கோபுர கோலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சந்திரன் சிவாச்சாரியார் கும்பாபிஷேக பூஜை செய்தார். திருப்பணிக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.