தர்மபுரி: தர்மபுரி, பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தர்மபுரி கடைவீதி, பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை, நான்காம் கால பூஜை, சுப்ரபாதம், 9 மணிக்கு மேல், 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது. மாலை, 4 மணிக்கு மேல், 6 மணிக்குள் ஸ்வாமி திருக்கல்யாண வைபவமும், 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.