ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமிகோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில்ஜனக்கல்யாண் 29வது ஆண்டு விழா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 80வது ஜெயந்தி விழாவையொட்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக பஞ்சமூத்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பிரஹந்நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. மதியம் அன்னதானமும், தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் குருக்கள் ரவிசுந்தர், ஜெய்சங்கர் செய்திருந்தனர்