பெண்ணாடம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.பெண்ணாடம் பெரிய நாயகிஅம்மன்கோவிலில் தைமாத சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு ஏராளமான பெண்கள், கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம்செய்தனர்.