Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவிலில் ரூ.11.95 லட்சம் ... ஆழத்து விநாயகர் நால்வருடன் உலா! ஆழத்து விநாயகர் நால்வருடன் உலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் 89 ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
நள்ளிரவில் 89 ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
11:02

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகேகீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாரிவேட்டை திருவிழா நடைபெறும். இதில், பக்தர்கள் தங்களின் குறைகள் தீர வேண்டி செம்மறி, வெள்ளாடுகளை நேர்த்திக்கடனாக செலுத்துவர். இந்தாண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு, "உச்சிபூஜை முடிந்தவுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 89 ஆடுகளை பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவற்றின் இறைச்சிகளில் ஒரு துண்டைக்கூட யாரும் வீடுகளுக்கு எடுத்து செல்லாமல், இரவோடு இரவாக சமைத்து மறுநாள் காலையில் பொது மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இறைச்சி சாப்பிடாதவர்கள்கூட பிரசாதமாக நினைத்து அன்னதானத்தில் பங்கேற்றனர். கோயில் பூஜாரி முனியாண்டி கூறுகையில், ""மற்ற கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், ஆடுகளை பலியிட்டவுடன் வீடுகளுக்கு எடுத்து சென்று, தங்களுடைய உறவினர்களுடன் சமைத்து சாப்பிடுவர். கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்தும் ஆடுகளின் இறைச்சி அனைத்து சமூகத்தினரும் உண்டு மகிழும் வகையில், அன்னதானமாக வழங்கப்படுகிறது. பகை உணர்வுள்ள நண்பர்கள், உறவினர்கள், இத்திருவிழா மூலம் இணைந்து, மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர், என்றார்.நேற்று சுவாமிகள் வீடு திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வரவேற்றனர். நிகழ்ச்சி துவங்கியதும் பக்தர்கள் நேர்த்தி கடனாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான தேங்காய்களை, ஊர் மத்தியில் உடைத்து வழிபட்டனர்.கடந்த 5 ஆண்டுகளுக்குமுன்பு, நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் அனைத்து தேங்காய்களும் உடைக்கப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு தேங்காய்களை சேகரிக்க பொதுமக்களுக்கு ஆர்வம் இல்லாததால் தேங்காய்கள் தேங்கி விட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar