Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவிய கலச அபிஷேகம்: குருவாயூர் ... செல்வம் பெருக செவ்வாயில் பொருள் வாங்குவோம்! செல்வம் பெருக செவ்வாயில் பொருள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
11:06

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாமி அம்மன்,யோக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஜூன் 17ம் தேதியன்று யாகசாலை பூஜை துவங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் 85 சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜையை மேற்கொண்டனர். நான்காவது நாளான நேற்று காலை 5 மணிக்கு பூஜை துவங்கியது. நேற்று காலை 9.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் 11 விமானங்கள்,இரண்டு ராஜகோபுரத்திற்கு சென்றனர். காலை 9.59 மணிக்கு திருத்தளிநாதர் திருக்கற்றாளியின் விமானத்தில் இருந்த குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள் கொடியினை அசைக்க,வாத்தியங்கள் ஒலிக்க, திருத்தளிநாதர் விமான நாற்கர கலசத்தில் பிச்சைக்குருக்கள் புனித நீரால் குடமுழுக்காடினார். அதே நேரத்தில் பிற விமான,கோபுர கலசங்களுக்கும் சிவாச்சாரியார்களால் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணி முதலே பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்திருந்தனர். திருவாடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமி, துளாவூர் ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா,முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் சோழன் பழனிச்சாமி, விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன்,கற்பகம், அருணகிரி, பூமாயி அம்மன் கோயில் அறங்காவலர் தங்கவேல், ஆ.பி.சீ.அ.கல்லூரி செயலர் ராமேஸ்வரன், அறநிலையத்துறை ஆஸ்தான ஸ்தபதி முத்தையா,ஆந்திர மாநில முன்னாள் ஆஸ்தான ஸ்தபதி கணபதி, டி.எஸ்.பி.முருகேசன், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த யாகசாலை பூஜையில் மத்திய அமைச்சர் சிதம்பரம், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, மதுரை ஆதீனம்,திருப்பனந்தாள் சுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar